நடிகர் டெல்லி கணேஷ், தமிழ் சினிமாவில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். திருநெல்வேலியில் பிறந்த அவர் ஏர்போர்ஸ் வேலைக்காக டெல்லி சென்ற போது அங்குள்ள தமிழ் நாடகக் குழுக்களோடு பழக்கம் ஏற்பட்டு மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
அப்படிதான் அவருக்கு சினிமாவுக்கான வழி பிறந்துள்ளது. அவரின் நடிப்பைப் பார்த்து கவரப்பட்ட பாலச்சந்தர், 1976 ஆம் ஆண்டு ‘பட்டின பிரவேசம்’ என்ற திரைப்படத்தில் அவரைஅறிமுகப்படுத்தினார்.

#image_title
1981 ஆம் ஆண்டு ‘எங்கம்மா மகாராணி’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார் டெல்லி கணேஷ். பின்னர் துணை கதாபாத்திரங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் டெல்லி கணேஷ். அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது பாலச்சந்தர் இயக்கிய சிந்து பைரவி திரைப்படம்தான். அதன் பின்னர் நகைச்சுவை, குணச்சித்திரம் என தனது நடிப்பால் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ளார் டெல்லி கணேஷ்.
இந்நிலையில் நேற்று முந்தினம் அவர் உடல்நலக் குறைவால் தன்னுடைய 81 ஆவது வயதில் காலமானார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய வடிவேலு பேசும்போது “நேசம் புதுசு படத்தில் வரும் அந்த பிரபலமான காமெடி, டெல்லி கணேஷ் அண்ணன் சொன்ன ஒரு சம்பவத்தால்தான் உருவானது. அவர் ஊருக்குப் போனபோது நடந்த சம்பவத்தை என்னிடம் சொன்னார். நான் அதைக் காட்சியாக வைக்கலாம் என்று முடிவு செய்து அதற்கு அவரிடம் அனுமதி பெற்று படத்தில் வைத்தோம். செல்லமாகக் கடிந்துகொண்டே அனுமதி தந்தார். அவர் அனுமதிக்கவில்லை என்றால் அந்த காட்சி வந்திருக்காது.

#image_title
அவரின் மறைவால் அவரது அன்பை இழந்து நிற்கிறேன். அவரோடு இணைந்து நடித்தபோது கொடுத்த அறிவுரைகளை எல்லாம் மறக்க முடியாது. நான் மதிக்கும் பல நடிகர்களில் அவரும் ஒருவர்” எனக் கூறியுள்ளார்.
