டெல்லியின் தயாள்பூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி நேற்று மதியம் அவருடைய உறவினருக்கு ஐஸ் கொடுப்பதற்காக வெளியே சென்றுள்ளார். பிறகு நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியை அவருடைய தந்தை பல இடங்களில் தேடிய போது நேரு விஹார் பகுதியில் காலனியில் வசிப்பவர்கள், நபர் ஒருவர் அவருடைய பிளாட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறியுள்ளனர். அந்த பிளாட்டின் உரிமையாளர் பூட்டின் சாவி சகோதரி இடம் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது அந்த சிறுமி சூட்கேட்சில் ஆடைகள் களையப்பட்டு சுயநினைவு இல்லாமல் கிடந்துள்ளார்.
அந்த சிறுமி கொடூர முறையில் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது அருகில் உள்ள மருத்துவமனை பரிசோதனையில் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் அந்தரங்க பாகங்களில் தொடர்ந்து ரத்தம் வழிந்து உள்ளது. உடலின் வேறு பகுதிகளில் காயங்கள் எதுவும் தெரியவில்லை. உடனடியாக குழந்தையை உயர் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…