வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

By Gayathri on ஆவணி 24, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவர் சமீபத்தில் காலமானதைத் தொடர்ந்து, அவரது வீட்டில் இருந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் பணம் மற்றும் சில்லறைக் காசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் சமூக வலைதளங்களில் பல கோடிகள் சிக்கியதாக வதந்திகள் பரவினாலும், முழுமையாக எண்ணிப் பார்த்ததில் அங்கு சேகரித்து வைக்கப்பட்டிருந்த மொத்த பணத்தின் மதிப்பு ரூ.8.40 லட்சம் என்பது உறுதி செய்யப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட இந்த ஒட்டுமொத்த தொகையானது மூதாட்டியின் இரண்டு சகோதரர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. அதில் ஒரு சகோதரர் தனது பங்காக 6 லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டார். மற்றொரு சகோதரர் தனக்கு வழங்கப்பட்ட 2.40 லட்ச ரூபாயைத் தான் வைத்துக்கொள்ளாமல், அதனை அப்பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு முழுமையாக நன்கொடையாக வழங்கிவிட்டார். பல ஆண்டுகளாக யாசகம் பெற்று மூதாட்டி சேமித்து வைத்த பணம், இறுதியில் அவரது மரணத்திற்குப் பின் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.