சாட்சியை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை உறுதி… மதுரை உயர் நீதிமன்ற கிளை பரபரப்பு தீர்ப்பு…!!

By Soundarya on கார்த்திகை 28, 2025

Spread the love
திருநெல்வேலி மாவட்டம் பாளையஞ்செட்டிகுளத்தில் 2016 ஆம் வருடம் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் செல்வராஜ் என்பவருக்கு எதிராக வைகுண்டம் என்பவர் சாட்சி அளித்தார். இதையடுத்து வைகுண்டம் 2022 ஆம் வருடம் செல்வராஜ் உள்ளிட்ட 8 பேரால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த  இன்றைய வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது.
இதில் சாட்சி வைகுண்டம் என்பவரை கொலை செய்த செல்வராஜுக்கு தூக்கு தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 3 பேருக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.