நம் வீட்டு சமையல் அறையில் பழைய பிரஷர் குக்கரை தொடர்ந்து உபயோகப்படுத்தினால் அதிலிருந்து வெளியேறும் ஈயம் உணவில் கலந்து குழந்தைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குழந்தைகள் இருக்கும் குடும்பங்களில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தானேவில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை உள் மருத்துவத்துறை ஆலோசகரான டாக்டர் அனிகேத் முலே கூறும் போது குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஈய நச்சுத்தன்மை என்பது குழந்தைகளுக்கு அதிக தீங்கை விளைவிக்கும் என கூறியுள்ளார்.
எலும்பியல் டாக்டர் மனன் வோரா கூறியதாவது, பழைய பிரஷர் குக்கர் பற்றி கூறும்போது, பழைய குக்கரில் உள்ள கீறல்கள், கருப்பு நிற தடயங்கள் ஈயம் அல்லது அலுமினியம் போன்ற உலோகங்களை உணவில் கசிய வைக்கும். ஆனால் நம் உடம்பிலிருந்து அந்த ஈயம் எளிதில் வெளியேறாது.
அது எலும்பு, மூளை என பல உறுப்புகளில் படிந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியை மெதுவாக்கும். நுண்ணறிவு திறனையும் குறைக்கும். பிரஷர் குக்கரில் கீறல்கள், கருப்பு புள்ளிகள், தளர்வான மூடி அல்லது விசில் இருந்தால் உடனடியாக அதை மாற்ற வேண்டும்.
பிரஷர் குக்கரில் இருந்து வெளியேறும் ஈயம் பெரியவர்களுக்கு நீடித்த சோர்வு, எரிச்சல், மனநிலை மாற்றம், நினைவாற்றல் குறைவு, ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும். குழந்தைகளில் அறிவாற்றல் குறைவு, கற்றல் சிரமம், மூளை வளர்ச்சிக்கு தடை, நடத்தை சிக்கல்களை ஏற்படுத்தும். பிரஷர் குக்கர் சிறப்பாக வேலை செய்தாலும் பத்து ஆண்டுகள் கடந்து விட்டால் அதை மாற்றுவது நல்லது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…