BREAKING: சிலிண்டர் வாங்குவதற்கான கால இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்வு… ஒன்றிய அரசு அதிரடி..!!

By Soundarya on பங்குனி 10, 2026

Spread the love

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் புதிய கட்டுப்பாட்டை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி, ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு மற்றொரு சிலிண்டர் வாங்குவதற்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக உயர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், பொதுமக்கள் அடுத்தடுத்த சிலிண்டர்களைப் பெறுவதில் தற்போது கூடுதல் தாமதம் ஏற்படும்.

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான நுகர்வோருக்குத் தடையின்றி சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவும், தேவையற்ற இருப்பைக் குறைக்கவும் இந்த புதிய கால வரம்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.