3 மணி நேரத்தில் டிட்வா புயல் உருவாகும் என வானிலை மையம் தெறிவித்திருந்த நிலையில் தற்போது உருவாகியுள்ளது. அதாவது தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்துள்ளது. புயலாக உருவானதை தொடர்ந்து ஏமன் நாடு பரிந்துரைத்த “டிட்வா” புயல் என்று பெயர் சூட்டியது இந்திய வானிலை ஆய்வு மையம்.
