BREAKING: கனமழை எதிரொலி…. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார் கலெக்டர்…..!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

தமிழகத்தில் புயல் எதிரொளியாக 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விழுப்புரம் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புயல் எதிரொலியால் புதிதாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. நள்ளிரவு முதல் மழை பெய்து வரும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்வதால் இன்னும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.