இலங்கை கடற்பகுதியில் உருவான டிட்வா புயல் தற்போது வட தமிழக பகுதியை நோக்கி எட்டு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி புயல் தற்போது சென்னையில் இருந்து தென்கிழக்கு சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த புயல் கரையை நோக்கி நகரும் வேகம் சற்று அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு 400 km தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. புயல் எதிரொலியாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
நாளை அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை இந்த புயல் நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் சென்னையை நெருங்கும் சமயத்தில் அதன் தீவிரம் குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இருந்தாலும் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…