அதிமுகவில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கட்சிப் பதவிகள் தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர்களிடையே பெரும் புகைச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்தப் பதவிகளை ஏற்பதா வேண்டாமா என்பது குறித்து சி.வி.சண்முகம் தலைமையில் அதிருப்தி தலைவர்கள் இன்று கூடி முக்கிய முடிவெடுக்க உள்ளனர்.
குறிப்பாக, எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்புகளுக்கு அமைப்புரீதியான எந்தவொரு உண்மையான அதிகாரங்களும் இல்லை என்ற குமுறல் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளதோடு, தற்போதைய புதிய மாற்றங்களிலும் சி.வி.சண்முகத்திற்கு எந்தவித முக்கிய பொறுப்பும் வழங்கப்படாதது கட்சிக்குள் மீண்டும் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
