நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக, தனது எம்.எல்.ஏ-க்களை ஒவ்வொருவராக இழந்து வருவதுடன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களையும் தக்கவைக்க முடியாமல் தவித்து வருகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துவிட்ட சூழலில், கட்சியின் மூத்த தலைவரான சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமியுடன் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.
தேர்தல் முடிந்தது முதலே அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து, தவெகவிற்கு ஆதரவு அளிக்கவும், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் தீவிரமாகச் செயல்பட்டவர் சி.வி.சண்முகம். இருப்பினும், அவர் இதுவரை தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. அதிமுகவினர் தொடர்ந்து தவெகவில் குவிந்து வருவது, அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஏற்கனவே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், தவெகவில் இணைய ஆர்வமாக இருக்கும் சி.வி.சண்முகம், தனக்கு மாநில அவில் முக்கியப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதே அவரது தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தேர்தலுக்கு முன்பே தவெகவில் இணைந்த செங்கோட்டையனை அக்கட்சியினர் எளிதாக ஏற்றுக்கொண்டனர். ஆனால், தற்போது தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதிமுகவினர் தவெகவை நோக்கி வருவது சுயநல அரசியல் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், சி.வி.சண்முகம் போன்ற ஒரு மூத்த தலைவருக்கு மாநில அளவிலான உயர் பொறுப்பு வழங்கப்பட்டால், அது தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் நீண்டகாலமாக உழைத்த நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதால் தவெக தலைமை இந்த விஷயத்தில் சற்று தயக்கம் காட்டி வருகிறது.
மறுபுறம், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அடுத்தடுத்து தவெகவில் இணைவது குறித்து ஆளுநர் அர்லேகரிடம் எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன. இந்த விவகாரத்தில் ஆளுநர் விசாரணை நடத்த முற்படுவதால், புதிய சேர்க்கைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தவெக தலைமை முடிவு செய்துள்ளது; இதுவும் சி.வி.சண்முகத்தின் இணைவிற்கு மற்றொரு தடையாக அமைந்துள்ளது. அதேசமயம், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடனான மோதல் மற்றும் விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமைகளுடனான தினசரி குடைச்சல்கள் காரணமாக, விரைவில் தனக்கான முடிவை அறிவிக்குமாறு தவெக தலைமைக்கு சி.வி.சண்முகம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பி.எப். தொகை…
திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் சாதனை…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.…
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சுனில். கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு…
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்துள்ள கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரத்குமார். இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு…
விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,…