“47 பள்ளிகள் கொடுத்த அந்த ஒரு வாக்குமூலம்”… ரூ.100 கோடி மோசடி வழக்கில் தலைகீழாக மாறிய தீர்ப்பு…. அதிர்ச்சியில் உறைந்த நிர்வாகிகள்….!

Spread the love

தனியார் பள்ளிகளுக்குத் தேவையான சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த புகாரில் சிக்கியுள்ள தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொருளாளர் முத்துக்குமாரின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சங்கத் தலைவர் பி.டி.அரசகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் இறுதியில் கைது செய்த நிலையில், தலைமறைவாக உள்ள முத்துக்குமாரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் பதிவு செய்யப்படாத சங்கம் நடத்தி வந்த பி.டி.அரசகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள், தங்களுக்குள்ள அரசியல் மற்றும் அதிகார தொடர்புகளைப் பயன்படுத்தி பள்ளிகளுக்கான நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பல பள்ளி நிர்வாகிகளிடம் பெருந்தொகையை வசூலித்து ஏமாற்றியதாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி முத்துக்குமார் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனக்கு நெருக்கமானவர் என்று கூறிக்கொண்டு மனுதாரர் இந்த பிரம்மாண்ட மோசடியில் ஈடுபட்டுள்ளார்; இந்த மோசடி தொடர்பாக இதுவரை 47 பள்ளிகளின் நிர்வாகிகள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், பல்வேறு பள்ளிகளிடம் இருந்து சுமார் ரூ.100 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாலும், இந்த வழக்கு விசாரணை தற்போது ஆரம்பக் கட்ட நிலையில் இருப்பதாலும் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று காவல்துறை தரப்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை முழுமையாக ஏற்றுக்கொண்ட நீதிபதி இளந்திரையன், முத்துக்குமாருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து அவரது மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்தார். இதனால் இவ்வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது…. “உடலைக் கூட பார்க்கல… ஆனா பொம்மையை வச்சு இறுதிச்சடங்கு”…. நேபாள வெள்ளத்தில் கதறும் பெண்ணின் சோகம்…!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளம், பல கிராமங்களை தடம்…

15 minutes ago

ஜன்னல் வழியா வந்த கொடூரம்….. நர்ஸ் கதற கதற பலாத்காரம்… கொலை பண்ணிட்டு போய் நிம்மதியா தூங்கியிருக்கான்…. ஹைதராபாத் போலீசாரையே உரையவைத்த கொடூரனின் சைக்கோத்தனம்….!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஹாடிஷரீஃப் பகுதியில், பணி நிமித்தமாக தங்கியிருந்த 24 வயது செவிலியர் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை…

23 minutes ago

“ஊழல்னா ஏன் இவ்ளோ பதற்றம்?”.. ஃபோன் வயர் அறுந்துபோச்சு…. பெயரைச் சொல்லாமலே திமுகவை கதறவிட்ட தவெக…. ஒரே போஸ்ட்டில் சூடான தமிழக அரசியல் களம்…!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே வார்த்தைப் போர்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், "ஊழல்" என்ற…

34 minutes ago

“ஈரானின் வரைபடமே மாறப்போகுது”…. உலகைப் பதறவைத்த டொனால்ட் ட்ரம்ப்பின் பகிரங்க மெசேஜ்… அமெரிக்காவின் கோரத் தாண்டவம்….!

மத்திய கிழக்கு பிராந்தியம் மீண்டும் ஒரு முனையிலான பெரும் போர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரானிய இஸ்லாமிய…

44 minutes ago

“அடுத்த நொடியே பேரழிவு”…. பேச்சுவார்த்தைக்கு நான் கூப்படல, ஹார்முஸ் எங்க முழுமையான கட்டுப்பாட்டுல இருக்கு…. ட்ரூத் சோஷியலில் அதிபர் ட்ரம்ப் போட்ட குண்டு….!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களும் ராணுவ மோதல்களும் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்திருந்த நிலையில், நிலைமை மேலும்…

55 minutes ago

“சட்டப்பேரவையில் 100 ஆண்டு வரலாற்றுச் சாதனை”…. முதன்முறையாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த தவெக பெண் எம்.எல்.ஏ… திடீரென நடந்த அந்த 15 நிமிட சம்பவம்….!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஒரு வரலாற்றுப்பூர்வமான தருணம் நிகழ்ந்தது. திருப்பூர் வடக்கு தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான…

1 மணத்தியாலம் ago