ஒரே குடும்பத்தில் பல கடன்களா..? “இனி யாரும் தப்ப முடியாது பாஸ்” கூட்டுறவு சங்கங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

By Soundarya on ஆனி 27, 2026

Spread the love

தமிழக அரசின் ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் முறைகேடுகள் ஏதும் நடப்பதைத் தவிர்க்கும் வகையில், கூட்டுறவுத் துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, 5 முதல் 6 கூட்டுறவு சங்கங்களுக்கு தலா 3 பேர் கொண்ட சிறப்பு சரிபார்ப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள், தகுதியான பயனாளிகளின் ஆவணங்கள் மற்றும் விவரங்களை மிக தீவிரமாக ஆய்வு செய்து, தள்ளுபடி பட்டியலை துல்லியமாக சரிபார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

மேலும், இத்திட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பயிர்க்கடன் பெற்றிருப்பது கண்டறியப்பட்டால், விதிமுறைகளின்படி ஒருவரது கடன் மட்டுமே தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தகுதியற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் பலனடைவது தடுக்கப்பட்டு, உண்மையான மற்றும் தகுதியான விவசாயிகளுக்கு மட்டுமே தள்ளுபடி சலுகை முழுமையாகச் சென்றடைவது உறுதி செய்யப்படும்.