கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத் தற்போது கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் கடன் தள்ளுபடி நிலையை எளிய முறையில் அறிந்து கொள்ளும் வகையில் இணையதள சேவை மேம்படுத்தப்பட்டுள்ளது.
பயிர்க்கடன் தள்ளுபடி பெறத் தகுதியானவர்கள் www.kooturavu.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று, அதில் உள்ள பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான பகுதியைத் தேர்வு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து உங்கள் மாவட்டம் மற்றும் சார்ந்த கூட்டுறவு சங்கத்தைத் தேர்ந்தெடுத்து உள்ளீடு செய்வதன் மூலம், தள்ளுபடி பட்டியலைத் தரவிறக்கம் செய்து உங்கள் பெயர் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையின் விவரங்களைத் துல்லியமாகச் சரிபார்த்துக் கொள்ளலாம்.
