முதலைக்கும், மேயருக்கும் திருமணம் செய்து வைத்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மெக்சிகோ நாட்டின் ஒசாகா பகுதியில் மேயருக்கும், பெண் முதலைக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்துள்ளார்கள். அதாவது அப்பகுதியில் உள்ள மக்கள் மழை பெய்ய வேண்டிய இது போல செய்துள்ளார்கள்.
எனவே முதலைக்கு மணப்பெண் போல உடை உடுத்தி மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து முதலைக்கு முத்தமிட்ட மேயர் அதை கையில் ஏந்தி நடனமாடியும் உள்ளார். கடந்த 230 வருடங்களாக இந்த சடங்கு மெக்சிகோ நாட்டில் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
