திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி காரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) இன்று காலை அவசர மாநில செயற்குழு கூட்டத்தைக் கூட்டுகிறது. திமுக தரப்பில் ஒதுக்கப்படும் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் நீடிப்பதா அல்லது கௌரவமான இடங்கள் கிடைக்காத பட்சத்தில் கூட்டணியிலிருந்து அதிரடியாக வெளியேறுவதா என்பது குறித்து இந்த ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.
ஏற்கனவே தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சிபிஎம்-மின் இந்த அவசர முடிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
