டேய் ஒடுங்கடா..! முதல்வர் நிதிஷ் குமார் இறங்குவதற்கு முன்… ஹெலிகாப்டர் தளத்திற்குள் புகுந்த மாடு… அலறியடித்து ஓடிய போலீஸ்… வைரலாகும் பகீர் காட்சி…!!

Spread the love

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது ‘சமிருத்தி யாத்திரை’ (Samriddhi Yatra)-ன் மூன்றாம் கட்டமாக இன்று (மார்ச் 14, 2026) பெகுசராய் பகுதிக்கு வருகை தரவிருந்தார். இதற்காக அங்கு ஹெலிகாப்டர் தளம் (Helipad) தயார் செய்யப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், முதலமைச்சரின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, தறிகெட்டு ஓடிவந்த ஒரு மாடு திடீரென ஹெலிபேட் பகுதிக்குள் நுழைந்தது.

மூங்கில் தடுப்புகளை மீறி உள்ளே புகுந்த அந்த மாடு, அங்கிருந்த அதிகாரிகளையும் போலீசாரையும் துரத்தத் தொடங்கியது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அந்த மாட்டினை அங்கிருந்து விரட்ட முயன்றனர். ஆனால், அது போலீஸ்காரர் ஒருவரை ஆக்ரோஷமாகத் துரத்தியதால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஒருகட்டத்தில் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, லத்தி மற்றும் தடிகளுடன் திரண்ட போலீசார் அந்த மாட்டினை பாதுகாப்பான தூரத்திற்கு விரட்டினர்.

முதலமைச்சர் வருவதற்கு முன்பே பாதுகாப்பு வளையத்திற்குள் மாடு புகுந்தது, அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், முதலமைச்சரின் வருகைக்காகச் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகளை இது வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

Soundarya

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

56 minutes ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

1 மணத்தியாலம் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

1 மணத்தியாலம் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

2 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

3 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

3 மணத்தியாலங்கள் ago