திரைப்படங்கள் ரிலீஸ் ஆன மூன்று நாட்களுக்கு ஆன்லைன் ரிவ்யூவை தடை செய்யக்கோரி தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், “நீதிபதிகளைலேயே விமர்சிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம்.
புது பட ஆன்லைன் ரிவியூவை இங்கே தடுத்தால் அஜர்பைஜானில் மற்றொருவர் அதை செய்வார். அப்போது என்ன செய்வீர்கள்? திரைப்பட ரிவ்யூ கருத்து சுதந்திரத்திற்கான உரிமை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
