தமிழ் சினிமாவில் பிரபலமான இசை அமைப்பாளர் மற்றும் நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு தன்னுடைய பள்ளி தோழியும் சினிமா பின்னணி பாடகியுமான சைந்தவியை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில் சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்திருப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இவர்களுடைய விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜரான இருவரும் பிரிவதாக தெரிவித்தனர். அதேசமயம் குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்த முரண்பாடும் இல்லை என்று ஜிவி பிரகாஷ் நீதிபதி முன்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜீவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
