நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த படம் வா வாத்தியார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படம் ஷூட்டிங் துவங்கி 2 ஆண்டுகளான நிலையில் பல கட்டங்களாக தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக வருகிற 12ம் தேதி வா வாத்தியார் படம் ரிலீஸ் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.
அதில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தங்களிடம் 10.39 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தது. அந்த கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தும் வரை இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் தருமாறு ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளார். அதனால் வா வாத்தியார் படம் குறித்த தேதியில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கார்த்தி ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…