தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாரிதுரை (83), மனைவி முத்துலட்சுமி (74). இவர்களுக்கு இரு மகள்களும், ஆனந்த் (52) என்ற மகனும் உள்ளனர். ஆனந்த் புதுச்சேரியில் வசித்து வருகிறார். இவருக்கு, கலா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். ஆனந்த் மடுகரையில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார். மாரிமுத்துவின் மகள் கும்பகோணத்தில் வசித்து வருகிறார்.
மாரிமுத்து முத்துலட்சுமி இருவரும், மகன் & மகள்கள் வீட்டில் மாறி மாறி வசித்து வந்துள்ள நிலையில், கடந்த 2 மாதங்களாக ஆனந்தின் பராமரிப்பில் தாய் தந்தை வசித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால், அவர்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டு, வீட்டிற்கு செல்லும்படி கூறிவிட்டு வேலைக்குச் சென்றார், ஆனந்த். அவர்கள் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு அதே பகுதியில் உள்ள வாய்க்காலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.
அப்பொழுது அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு முத்துலட்சுமி உடல் நலம் தேறி வீட்டுக்கு திரும்பி நிலையில், மாரிமுத்து சிகிச்சை பலனின்றி நேற்று காலை 4:25 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் இறந்த செய்தியை கேட்ட முத்துலட்சுமி, காலை 6:10 மணியளவில் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத்…
தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…
தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் ஆதரவு கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவர் பகுதியில் அதிவேகமாக வந்த 'தார்' (Thar) ரக கார் ஒன்று, ஸ்கூட்டரில் சென்று…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனைத் தற்காலிகச் சபாநாயகராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அது குறித்த பரிந்துரைக்…