ஈரோடு மாவட்டம் காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜ்குமாருக்கு சுமிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சுமிதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவரும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இதனை அறிந்த ராஜ்குமாரின் மனைவி ரேவதி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் சுமிதாவுடன் பேசமாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்த ராஜ்குமார் வேலைக்கு சென்றார்.
அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. என்னவென்றால் ராஜகுமாரும் சுனிதாவும் கோவையிலிருந்து சேலத்திற்கு பேருந்தில் வந்துள்ளனர். இருவரும் பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளனர். இதனையடுத்து பேருந்தில் இருந்து இறங்கியதும் இருவரும் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்தது.
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…
மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…
மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்களுக்குரிய உணவுப் பொருட்களைப்…