“7 நாள் கெடு… ஆனா கொடுத்ததோ 1 நாள் தான்”…. விஜய் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் நடந்த அதிரடி விபரீதம்…. அம்பலமான டெண்டர் ரகசியம்…!

By Nanthini on ஆடி 14, 2026

Spread the love

தமிழக நகராட்சித் துறையில் குறுகிய கால டெண்டர்கள் (ஒப்பந்தப் புள்ளிகள்) கோரப்படுவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார், அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பொதுவாக, அவசர கால அல்லது குறுகிய கால டெண்டர்களுக்கு விண்ணப்பிக்க விதிகளின்படி குறைந்தபட்சம் 7 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.

ஆனால், தற்போது தமிழக முதல்வர் விஜய் அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாகத் துறையின்கீழ் வரும் செங்கம், கோத்தகிரி மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய நகராட்சிகளில் பல்வேறு திட்டப் பணிகளுக்காக வெளியிடப்பட்ட டெண்டர்களில், வெறும் 1 முதல் 4 நாள்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகக் கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ளன. தங்களுக்குச் சாதகமான குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே இந்த டெண்டர்களை ஒதுக்கும் நோக்கில் விதிகள் திட்டமிட்டே மீறப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போதைய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.