உத்தரப் பிரதேச மாநிலம் காசீப்பூரில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த இளம் பெண் ஒருவர், நள்ளிரவு 3 மணி வரை நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளார். அவர் கோவில் வாசலை நெருங்கியதும், அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த போலிஸார் அவரது அடையாள அட்டையைச் சோதித்துள்ளனர். அப்பெண் தனது அடையாள அட்டையைக் காட்டியபோது, “காசீப்பூர் அடையாள அட்டை செல்லாது, வாரணாசி உள்ளூர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்” எனக் கூறி அவரை உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஒருபுறம் விஐபி தரிசனத்திற்கு மக்கள் எளிதாகச் சென்று கொண்டிருக்கும் போது, சாதாரணப் பக்தையான தான் நீண்ட நேரம் காத்திருந்தும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அப்பெண் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். “நான் என்ன உள்ளே சென்று அசம்பாவிதம் செய்யப் போகும் குற்றவாளியா? காசீப்பூரில் இருக்கும் எனக்கு வாரணாசி ஐடி எப்படி கிடைக்கும்?” எனக் கூறி அவர் அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தையும் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…