இது என்னப்பா புதுசா இருக்கு?… ஓய்வுபெற்ற காவல் அதிகாரிக்காக… காரை வாயால் இழுத்துச் சென்ற கான்ஸ்டபிள்… இணையத்தில் வைரல் வீடியோ…!

By Swetha on ஆவணி 1, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் ஓய்வுபெற்ற காவல் துறை தலைவர் அரவிந்த் சக்சேனா அவர்களுக்கு காவல்துறை சார்பில் மறக்க முடியாத மற்றும் வித்தியாசமான வழிஅனுப்பு விழா நடத்தப்பட்டது. தனது பணிக்காலத்தில் சிறந்த அதிகாரியாக விளங்கிய அவருக்கு, சக அதிகாரிகளும் காவலர்களும் மனமார்ந்த வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்தனர். வழக்கமாக காவல் அதிகாரிகளின் ஓய்வின் போது அவர்களது வாகனத்தை கயிறுகளால் கட்டி காவலர்கள் இழுப்பது மரபு. ஆனால், இந்த விழாவில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரு அபூர்வமான சம்பவம் நிகழ்ந்தது.

‘பாகுபலி’ என்று அழைக்கப்படும் காவல் கான்ஸ்டபிள் சோனு திவாரி, ஓய்வுபெற்ற ஐஜி அரவிந்த் சக்சேனா அமர்ந்திருந்த காரை தனது பற்களால் கயிற்றைப் பிடித்து இழுத்துச் சென்றார். சக காவலர்கள் கைகளால் காரை இழுக்க, சோனு திவாரி தனது அசாத்திய உடற்பயிற்சித் திறமையையும் பலத்தையும் காட்டி பற்களாலேயே காரை முன்னோக்கி இழுத்துச் சென்ற காட்சி அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த வித்தியாசமான மரியாதை செலுத்தும் முறை விழாவுக்கு வந்திருந்தவர்களின் பலத்த கைதட்டலையும் பாராட்டையும் பெற்றது.

   

இந்த அசாத்தியமான நிகழ்வின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலர் கான்ஸ்டபிள் சோனு திவாரியின் வியக்கத்தக்க பலத்தையும், ஓய்வுபெற்ற அதிகாரி மீது அவர் கொண்ட அன்பையும் பாராட்டி கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு உயர் அதிகாரிக்குக் கீழ்நிலை ஊழியர் ஒருவர் தனது தனித்துவமான திறமையின் மூலம் விடை கொடுத்த இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேச காவல்துறையில் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத தருணமாக மாறியுள்ளது.