“ஐயோ கடவுளே… உயிருக்காக கெஞ்சிய உரிமையாளர்… அதிகாரிகளின் கண்முன்னே கொடூரமாகக் கொல்லப்பட்ட செல்லப் பிராணி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!”

By Swetha on ஆவணி 1, 2026

Spread the love

மலேசியாவின் போர்ட் கிளாங் பகுதியில் உள்ள தாமான் தெலுக் கெடுங் இண்டா பகுதியில், ‘ராக்கி’ என்ற செல்லப் பிராணி நாய் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெரு நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது, சில உள்ளூர் நபர்கள் ராக்கியைத் தடியால் அடித்தும், அதன் கழுத்தில் கயிறு அல்லது கம்பியை இறுக்கியும் கொடூரமாக இழுத்துச் சென்று கொன்றதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்தக் கொடூரச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த நாயின் உரிமையாளரும் அவரது குடும்பத்தினரும், ராக்கியை விட்டுவிடுமாறு அழுது கெஞ்சியபோதிலும் அக்குழுவினர் அதைப் பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. நாயைக் காப்பாற்ற முயன்ற உரிமையாளரையும் சிலர் தாக்கியதாக மலேசிய விலங்கு நல அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கிள்ளான் மாநகராட்சி அதிகாரிகளின் முன்னிலையிலேயே இந்த அநீதி நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

   
https://www.instagram.com/reel/DbcwUE5zHDR/?utm_source=ig_web_button_share_sheet

இச்சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் #JusticeForRocky என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இதில் தொடர்புடைய நபர்கள் மற்றும் சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகள் மீது ‘விலங்கு நலச் சட்டம் 2015’-இன் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் தீவிரமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது காவல்துறையினரும், சிலாங்கூர் மாநிலக் கால்நடை பராமரிப்புத் துறையும் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.