தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க திமுக ஒரு பக்கம் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்க மறுப்பக்கம் ஈபிஎஸ் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதற்கான வேலையை செய்து கொண்டிருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக கூட்டணி ஆட்சி தான் தமிழகத்தில் அமையும் என்று உறுதியாக உள்ளது.

இப்படியான நிலையில் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கோபால் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தன்னை பாஜகவை இணைத்துக் கொண்டார். காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் திமுக எம்பி திருச்சி சிவா இதுவரை மதிப்பு கேட்காத போதிலும் காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் தொடர்வதை தான் விரும்பவில்லை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
