காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஒரு இடத்தில் மக்களை சந்திக்க சென்றார். அவர் காரை விட்டு இறங்கியவுடன் இளைஞர் ஒருவர் ஜோதிமணி பக்கம் நோக்கி நடந்து சென்று ஏதோ கேட்க முயன்ற போது அவருடன் இருந்த ஒருவர் அந்த இளைஞரை அந்தப் பக்கம் போடா என்று ஆவேசமாக தள்ளிவிட்டார். அதற்கு அந்த வாலிபர் என்னை அடித்து விடுவீர்களா என்று எதிர்த்து நின்றதால் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் அந்த நபரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தன்னுடைய தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஒரு சாதாரண குடிமகன் கேள்வி கேட்கும்போது அவரை எதற்கு மிரட்ட வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெற்று அரசியல் பேச்சுகளுக்கு அப்பால், என்னென்ன உறுதியான பங்களிப்புகள் செய்யப்பட்டுள்ளன என்று தனது தொகுதியை நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஒரு சாதாரண குடிமகன் கேள்வி கேட்க முழு உரிமையும் உள்ளது. இத்தகைய ஒரு அடிப்படை ஜனநாயக கேள்வி ஏன் மிரட்டலுக்கு வழிவகுக்க வேண்டும்.
இந்த கேள்வியை கரூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மட்டும் உரியது கிடையாது. கடந்த ஆறு வருடங்களாக இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனர். கேள்விகளுக்கு உண்மைகளுக்கு பதிலாக முஷ்டிகளாலும் மிரட்டலாலும் பதிலளிக்கப்படும்போது அது தோல்வியை வெளிப்படையாக ஒப்புக் கொள்வதாகும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தில், லாபத்திற்காகச் சுண்ணாம்பு, செயற்கை நிறங்கள் மற்றும் சோள மாவு போன்ற…
குறைந்த முதலீட்டில் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ தற்போது அனைத்து அஞ்சலகங்களிலும்…
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் முக்கியத்…
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, மீண்டும் போராட்டக்…
2026-ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனம், கடகம், மற்றும் சிம்மம் என மூன்று ராசிகளுக்குத் தனது இருப்பிடத்தை அதிரடியாக மாற்ற…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தமிழக அரசியல் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.…