மதுரையில் வருகின்ற செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநில மாநாட்டை ஒத்தி வைப்பதாக ஓபிஎஸ் திடீரென அறிவித்துள்ளார். NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த பிறகு முதல்வர் ஸ்டாலின் உடன் அடுத்தடுத்த சந்திப்பு, அதிமுக மீட்பு என அடுத்தடுத்து பேசு பொருளானார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடுவேன் என ஓபிஎஸ் கூறி இருந்த நிலையில் தற்போது மாநாட்டையும் ஒத்தி வைத்துள்ளது புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.
