அமைச்சர் மரிய வில்சன் தான் லஞ்சம் கொடுத்ததாகத் தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெனிபர், லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
லஞ்சம் கொடுப்பது மற்றும் வாங்குவது அரசியல் சாசனப் பிரிவுகளுக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் முற்றிலும் எதிரானது என்பதால், இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் நீதிமன்றத்தை நாடிச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மனுவில் அவர் உறுதியாக எச்சரித்துள்ளார்.
