தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று இரவு 7:30 மணிக்கு கரூரில் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வந்தடைந்தார். 12 மணிக்கு அவர் வருவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 8 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் என 36 பேர் உயிரிழந்தனர்.
50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம் ப்ரொத்தத்தூர் பகுதியில் மனைவியின் உடல் எடையைக் காரணமாகக் காட்டி, கணவனே அவருக்கு விஷம் கொடுத்துக்…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில அரசியல் களம் முன்னெப்போதும்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.…
புதுச்சேரியில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுகவுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்பதில் எடப்பாடி பழனிசாமி அவர்கள்…
தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில்…