Categories: சினிமா

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அந்த விஷயத்துல அவர் கொஞ்சம் வீக்தான்.. செந்தில் குறித்து மனைவி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!

Spread the love

தமிழ் சினிமாவில் 80, 90’ஸ் காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வளம் வந்த செந்தில் மனைவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் செந்தில். அதனை தொடர்ந்து கிளிஞ்சல்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட திரைப்படங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எதிர்பார்த்தபடியான பேர் இவருக்கு கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து கவுண்டமணியுடன் சேர்ந்து இவர் நடிக்க தொடங்கியதற்கு பிறகு இரண்டு பேரின் காம்போவும் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர் என ஏராளமான திரைப்படங்கள் இன்றளவும் செந்தில் மற்றும் கவுண்டமணியின் காமெடிகளில் புகழ்பெற்ற ஒன்றாக இருக்கின்றது.

அதிலும் கவுண்டமணி செந்திலை அடிக்கும் போதெல்லாம் எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் நடித்து அதிக அளவு ஸ்கோர் செய்தார். செந்திலின் பலத்தில் ஒன்றை அவரது வெகுளித்தனமான பேச்சு. ஊர்காரர் ஒருவர் போல் இருக்கும் அவரை பலரும் ஏற்றுக் கொண்டனர். அதிலும் கவுண்டமணியிடம் அவர் கேட்கும் சந்தேகங்கள் அதற்கு கவுண்டமணி கொடுக்கும் பதில் எல்லாம் சிரிப்பலையை ஏற்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் கவுண்டமணியும் செந்திலும் பிரிந்து கூட நடிக்க தொடங்கினார்கள். தொடர்ந்து படங்களில் வாய்ப்பு குறைந்ததன் மூலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கிய செந்தில் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் மூலமாக ரிஎன்றி கொடுத்தார். பின்னர் கடைசியாக லால் சலாம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் செந்தில் மனைவி youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

அதில் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அவர் கூறியதாவது “எங்கள் திருமணத்தில் இருந்து தான் எங்கள் ஊரில் பெண் பார்க்கும் படலம் என்பதே தொடங்கியது. சொந்த ஊருக்குள்ளேயே தான் பெண் கொடுத்து எடுத்துக் கொள்வார்கள். எனது கணவர் மட்டும் தான் மற்ற ஊரில் இருந்து வந்து என்னைப் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டார். கோடிக்கணக்கில் ரூபாய் சம்பாதித்தாலும் அவர் பண விஷயத்தில் ரொம்ப வீக்கு.

அவருக்கு பணத்தை என்ன கூட தெரியாது. நான் தான் அனைத்தையும் கவனிப்பேன். அதனால் திருமணம் முடிந்ததும், அவரது அப்பா என்னிடம் அவர் பண விஷயத்தில் ரொம்பவே வீக் . நீதான் பார்த்து நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுவர் .ஆனால் சில சமயங்களில் பணத்தை எடுத்துக் கொண்டுதான் கொடுப்பார். அதாவது யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்பதற்காக கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மீத பணத்தை தான் என்னிடம் கொடுப்பார்” என்று அவரின் மனைவி கலைச்செல்வி பேசியிருந்தார்.

Mahalakshmi

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

3 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

4 மணத்தியாலங்கள் ago