Categories: TRENDING

1987-ல் இப்படி ஒரு வீடா.. மனைவியின் ஆசையை நிறைவேற்றி வைத்த செந்தில்..  மனம் திறந்த செந்திலின் மனைவி..

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் செந்தில். இவரின் மனைவி தனது கனவு வீட்டை குறித்து பேசியிருந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல காமெடி நடிகராக கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் செந்தில். ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து கிளிஞ்சல்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஆனால் இவருக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

அதைத்தொடர்ந்து கவுண்டமணியுடன் காமினேஷனில் இவர் நடித்த அனைத்து காமெடிகளும் சூப்பர் டிப்பர் ஹிட் கொடுத்தது. அதிலும் வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை நாம் கூறலாம். இவர்கள் இருவரின் காமெடியில் வெளியான படங்கள் அனைத்தும் அப்போது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதிலும் நடிகர் கவுண்டமணி செந்தில் அடிக்கும் போதெல்லாம் எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் சிறப்பாக நடித்திருப்பார்.

அதுதான் அவரை மேலும் பிரபலமாகியது. அதைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் தனியாகவும் நடிக்க தொடங்கிய இவர் பல காமெடி நடிகர்களின் வரவால் சினிமாவை விட்டு விலகினார். நடிகர் செந்திலின் மிகப்பெரிய பிளஸ் ஆக இருந்தது அவரின் வெகுளித்தனமான பேச்சுதான். நம்ம ஊர்க்காரர் என்பவரை போல் நடந்து கொண்ட காரணத்தினால் பலரும் இவரை ஏற்றுக் கொண்டனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு செந்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற சூர்யாவின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கடைசியாக லால் சலாம் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். இவரின் மனைவி சமீபத்தில் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் செந்தில் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அவர் சினிமாவில் எப்படி இருப்பார் வீட்டில் எப்படி இருப்பார் என்பதை குறித்தும் பேசியிருந்தார்.

மேலும் அவர் கட்டிய வீடு குறித்து தற்போது பேசியிருக்கின்றார். 1987லேயே இந்த வீட்டை கட்டி இருப்பதாக கூறி இருந்தார். அந்த வீடு பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாக இருந்தது. அந்த வருடத்திலேயே அப்படி ஒரு வீட்டை கட்டி இருக்கின்றார் செந்தில். இதற்கு முன் இருந்த வீட்டில் ஹால் மிகவும் சிறியதாக இருக்கும். வருடா வருடம் இவர் சபரிமலைக்கு மாலை போட்டு பூஜை செய்வார்.

அப்போது யார் வந்தாலும் நிற்கக்கூட இடம் இருக்காது. அதற்காகவே தனது வீட்டில் ஹால் பெருசாக இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து கட்டியதாக கூறியிருந்தார். மேலும் தனது மகன் திருமண ரிசப்ஷனுக்கு ஜெயலலிதா அம்மையார் வந்தது குறித்து பெருமையாக பேசி இருப்பார். அவரின் வீட்டை சுற்றி அவரது மகன்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்கள் அனைத்தையும் மாட்டி வைத்திருந்தார்கள். தனது பேரக்குழந்தைகள் மகன்கள் அனைவரையும் குறித்து பல விஷயங்களை பேசி இருந்தார் செந்தில் மனைவி.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

விவாகரத்தான நபரை திருமணம் செய்யப்போகிறார் நடிகை சுனைனா? யார் அந்த துபாய் மாப்பிள்ளை?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…

11 நிமிடங்கள் ago

ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி.. பரபரப்பான கதைகளத்துடன் நகரும் பாக்கியலட்சுமி சீரியல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…

2 மணி நேரங்கள் ago

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…

3 மணி நேரங்கள் ago

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…

4 மணி நேரங்கள் ago

தமிழ் சினிமா மட்டுமில்ல.. இந்திய சினிமாவே தயாரா இருக்கணுமாம்.. தங்கலான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…

7 மணி நேரங்கள் ago

நான் தூக்கி வளர்த்த குழந்தை.. இன்னைக்கு வளர்ந்து மிகப்பெரிய விஷயத்தை செய்ய போறாரு.. வீடியோ வெளியிட்டு லாரன்ஸ் உருக்கம்..!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…

7 மணி நேரங்கள் ago