தமிழகத்தில் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் அவர்களின் கல்லூரிகளின் நோடல் அலுவலரை அணுகி https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகை பெற்று வரும் மாணவர்கள் புதுப்பித்தலுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 15 முதல் தொடங்கி உள்ளது.
இக்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பு பிரிவு மாணவர்கள் சில ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். அரசு கல்லூரிகள், அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பயில்பவர்கள் இக்கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா சேவை எண் 1800-599-7638 என்ற எண்ணிற்கு அலுவலக நேரங்களில் தொடர்புகொள்ளலாம்.
