ராஜஸ்தான் மாநிலத்தில் காதலியுடன் புதுவாழ்வை தொடங்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய மனைவியை பாஜக தலைவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீர் பகுதியை சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ரோஹித் சைனி, சஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும் அவர் அதே பகுதியை சேர்ந்த ரிது என்ற மற்றொரு பெண்ணுடன் சில காலமாக திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்து வந்துள்ளார். மனைவி அவர்களின் உறவுக்கு தடையாக இருந்த நிலையில் சமீபத்தில் சஞ்சு சந்தேகத்திற்கு இடமான சூழலில் வீட்டில் இறந்து கிடந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் தன் மனைவியை கொன்று விலைமதிப்பற்ற பொருட்களை திருடி விட்டு சென்றதாக போலீசாரிடம் ரோகித் நம்ப வைத்துள்ளார். இருந்தாலும் அவருடைய நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களுடைய பாணியில் விசாரித்த போது அவர் காதலியை ரிதுவின் தூண்டுதலின் பெயரில் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரோஹித் மற்றும் அவரை கொலை செய்ய தூண்டிய காதலி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
