திக் திக்… ஆதார் கார்டு கொடுத்த ஷாக்கிங் திருப்பம்… 8 மாதங்களாகக் மாயமான கல்லூரி மாணவிகள் கண்டுபிடிப்பு… பெங்களூருவை உலுக்கிய சம்பவம்…!!

By Swetha on புரட்டாதி 13, 2026

Spread the love

பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியைச் சேர்ந்த தனிஷ்கா மற்றும் தேஜஸ்வினி ஆகிய இரு மாணவிகள், கடந்த ஜனவரி 31-ம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு காணாமல் போயினர். அவர்களிடம் செல்போன் அல்லது ஏடிஎம் கார்டு எதுவுமின்றி ஆதார் அட்டைகள் மட்டுமே இருந்ததால், காவல் துறையினரால் வழக்கமான தடயங்களை வைத்து அவர்களைத் தொடர முடியாமல் தேடுதல் வேட்டை சிக்கலானது. தனிஷ்காவின் குடும்பத்தினர் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியதைத் தொடர்ந்து, இவ்வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

விசாரணையில், மாலே மகாதேஸ்வரா மலைப்பகுதியில் மாணவிகள் இருவரும் கனகபுரா தாலுகாவைச் சேர்ந்த ஒரு இளைஞரைச் சந்தித்தது தெரியவந்தது. குடும்ப அழுத்தம் காரணமாக வெளியேறிய அவர்கள், தங்களை ஆதரவற்ற சகோதரிகள் எனக் கூறியதை நம்பி அந்த இளைஞர் அவர்களை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தனிஷ்காவிற்கும் அந்த இளைஞருக்கும் திருமணம் நடந்துள்ளதுடன், தேஜஸ்வினி அவர்களுடனேயே தங்கியிருந்துள்ளார்.

   

சுமார் எட்டு மாதங்களாக எந்தத் தடயமும் இல்லாமல் நீடித்த இந்த வழக்கில், புதிய சிம் அட்டை வாங்குவதற்காக தனிஷ்கா தனது ஆதார் அட்டையைப் பயன்படுத்தியபோது மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. ஏற்கனவே ஆதார் விவரங்களைக் கண்காணித்து வந்த சிஐடி அதிகாரிகள், அந்தத் தொழில்நுட்பத் தடயத்தைக் கொண்டு மாணவிகள் தங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்து இருவரையும் மீட்டனர்.