பெற்றோர்களே உஷார்…. தமிழகம் முழுவதும் தடை…. அரசு அதிரடி அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 4, 2025

Spread the love

2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுப்பது குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ளது. அண்மையில் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருமல் சிரப் கொண்ட 11 பேர் உயிரிழந்தனர். அவர்கள் Coldref, Nextro ஆகிய மருந்துகளை உட்கொண்டது தெரியவந்துள்ளது. அந்த மருந்துகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கலப்படமாக இருந்ததால் மரணங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என அரசு சந்தேகிக்கிறது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அந்த இரண்டு இருமல் மருந்துகளை விற்பனை செய்யவும் விநியோகிக்கவும் அரசு தடை விதித்துள்ளது. இந்த மருந்துகளுக்கு தடை விதித்ததுடன் இவை தொடர்பான தீவிர ஆய்வுக்கும் விசாரணைக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.