சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபி பணியிடமே நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட்டிருந்ததாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். ஒரு மாநிலத்தின் மிக முக்கியத் துறையான சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் கடந்த தி.மு.க அரசு காட்டிய அலட்சியத்தையே இது காட்டுவதாக அவர் சாடினார். மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்கும், குளறுபடிகளுக்கும் தற்போதைய த.வெ.க ஆட்சியில்தான் முறையான விடைகளும் தீர்வுகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடந்ததற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள், தற்போது தங்களது மக்கள் நல அரசு மீது வீண் அவதூறுகளைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டினார். முந்தைய ஆட்சியாளர்களின் நிர்வாகத் தோல்விகளையும், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த ஊழல்களையும் தற்போதைய அரசு ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வந்து சரிசெய்து வருகிறது என்று குறிப்பிட்ட முதலமைச்சர் விஜய், கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கும், மக்கள் பாதுகாப்பும் மிக உறுதியாக நிலைநாட்டப்படும் என்று அவையில் உறுதியளித்தார்.
