சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

By Soundarya on ஆனி 23, 2026

Spread the love

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டிய விவகாரம் அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் உரையின் போது, டாஸ்மாக் பார்ட்டி ஃபண்ட் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதால் அவையில் கடும் அமளி நிலவியது.

இந்த அமளியைத் தொடர்ந்து, தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னரும் அவையில் தனது உரையைத் தொடர்ந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், “Evils evils என்று Devils பேசக்கூடாது” என எதிர்க்கட்சிகளை நோக்கி மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார்.

   

மேலும், சபாநாயகரின் முறையான அனுமதியைப் பெற்ற முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த காலங்களில் அவையில் செய்த சைகையைத் தானே நேரில் செய்து காட்டினார். முதலமைச்சரின் இந்த அதிரடி மற்றும் ஆக்ரோஷமான சைகை நடவடிக்கை ஒட்டுமொத்த சட்டமன்ற வளாகத்தையும் அதிர வைத்ததுடன், தற்போதைய தமிழக அரசியல் வட்டாரத்தில் மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.