விஜய்யின் 3 நாள் டெல்லி டூர்… அமித் ஷா முதல் ராகுல் காந்தி வரை.. பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசிய பிளான்.. உடைபடும் அரசியல் மர்மம்….!

Spread the love

தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்ற பிறகு, விஜய் தனது இரண்டாவது அரசுமுறைப் பயணமாக இன்று காலை டெல்லிக்குச் செல்கிறார். சென்னையில் இருந்து ஜூன் 10ஆம் தேதி காலை 8 மணியளவில் தனி விமானம் மூலம் புறப்படும் அவர், மூன்று நாட்கள் டெல்லியில் தங்கியிருந்து பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார். நாட்டின் வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டும் மிக முக்கிய அமைப்பான நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதே அவரது இந்த டெல்லி பயணத்தின் முதன்மை நோக்கமாகும்.

வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில், அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் முதல்வர் விஜய் கலந்துகொண்டு, தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மாநில உரிமைகள் குறித்துப் பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் பொருளாதாரத் தேவைகளை மத்திய அரசிடம் வலுவாக எடுத்துரைக்க இந்த மேடையை அவர் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

நிதி ஆயோக் கூட்டம் தவிர, டெல்லியில் உள்ள முக்கியத் தலைவர்களைச் சந்திப்பதற்கும் முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாகச் சந்திக்க உள்ளார். அதேபோல, துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் அவர் நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்புகள் அனைத்தும் தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் நிர்வாக ரீதியிலான உறவுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேலும், இந்த டெல்லி பயணத்தில் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் முதல்வர் விஜய் சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கடந்த முறை டெல்லி சென்றிருந்தபோது அவர் காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளானது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த முறை மூன்று நாள் பயணத்தின் போது கூட்டணித் தலைவர்களுடனான சந்திப்பு உறுதி செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனைத்து நிகழ்வுகளையும் முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

18 minutes ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

32 minutes ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

40 minutes ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

58 minutes ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

1 மணத்தியாலம் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

1 மணத்தியாலம் ago