தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள ஒரு தகவலின்படி, தமிழக முதல்வர் விஜய் தனது அமைச்சரவை சகாக்களுக்குக் கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படி, அமைச்சர்கள் அனைவரும் அடுத்த 6 மாதங்களுக்கு தினசரிச் செலவுகள் மற்றும் வழக்கமான அலுவல் சார்ந்த கோப்புகளில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றும், எந்தவொரு புதிய திட்டங்கள் அல்லது புதிய கோப்புகளிலும் கையெழுத்திடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கருதப்படும் சில ஒப்பந்ததாரர்கள் தற்போது தங்களுக்குச் சாதகமாகப் பணிகளைப் பெற அமைச்சர்களைத் தொடர்ந்து அணுகி வருவதாகத் தமிழக வெற்றிக் கழக வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவல்களே, முதல்வர் விஜய் இந்த அதிரடித் தடையை விதிப்பதற்குக் முக்கியக் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
