தீபாவளி பரிசாக pf பணத்தை முழுமையாக எடுக்கும் வசதியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி பணியாளர் மற்றும் நிறுவனம் என இரண்டு கணக்கிலிருந்தும் 100% வரை பணம் எடுத்துக் கொள்ளலாம். கிளைம் பிரிவுகளும் 3 ஆக குறைக்கப்பட்டுள்ளதுடன் திருமணம் மற்றும் கல்விக்காக வித்டிராயல் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வட்டி பலன்களை பெறும் வகையில் குறைந்தபட்ச இருப்பு தொகை 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
