இன்று சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு தான் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக சன் டிவி விஜய் டிவி சீரியல்களில் நடித்து வரும் நாயகிகள் ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் மனதை வென்று விடுகின்றனர். அதன்படி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வேதா என்பவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். விஜய் டிவியில் இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. இதில் தமிழ்ச்செல்விக்கு எப்படியாவது படித்து டாக்டராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. சீரியலில் +2 படிக்கும்போது தமிழ்ச்செல்விக்கு திருமணம் செய்து வைக்கப்படும் சூழலில் தொடர்ந்து தன்னுடைய கனவை துரத்தும் வேளையில் நடை போட்டு வருகிறார்.
இந்த சீரியலில் தன்னுடைய கனவுக்காக அடுத்தடுத்த விஷயங்களை தமிழ்ச்செல்வி போல்டாக செய்து வரும் சூழலில் இந்த சீரியலில் தமிழ்ச்செல்வியாக நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார் ஸ்வேதா. இப்படியான நிலையில் ஸ்வேதா சமீபத்தில் தன்னுடைய காதலனுடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். ஆனால் அவருடைய முகத்தை அவர் சரியாக காட்டவில்லை. இந்த நிலையில் ஸ்வேதா சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது காதலர் பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அதில், நான் சுமார் இரண்டு வருடத்திற்கு மேலாக அவரை காதலித்து வருகிறேன்.
அவருடைய முகத்தை வெளியில் காட்டாததற்கு சில காரணங்கள் உள்ளது. எங்களுடைய காதல் இருவரது வீட்டிலும் தெரியும். அடிக்கடி வீட்ல இருக்கவங்க கிட்ட அவங்க பேசுவாங்க. நைட் டைம்ல ஷூட்டிங் முடிய லேட் ஆயிட்டா அவங்க தான் என்ன கூட்டிட்டு வருவாங்க. அதுபோலவே சீரியலில் என்னுடைய சீனை தினமும் ஹாட்ஸ்டார் இல் பார்த்திடுவாங்க. ஒருவேளை ஏதாவது அதுல ரொமான்ஸ் சீன் வர மாதிரி இருந்தா அதை பாக்காம அப்படியே விட்டுருவாங்க. அவர் உண்மையிலேயே ஒரு நல்ல கேரக்டர். எனக்கு எந்த அளவுக்கு சப்போர்ட் பண்ண முடியுமோ அந்த அளவுக்கு பண்ணிட்டு இருக்காரு என்று தனது காதலர் பற்றி ஸ்வேதா பேசியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…