ஆண்டுக்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும்.. ரூ.2 லட்சம் காப்பீடு தரும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்..!

Spread the love

மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது நாட்டின் சாமானிய மக்களுக்கான சிறந்த விபத்து காப்பீட்டு திட்டம் ஆகும். இந்த திட்டம் ஒரு வருடத்திற்கான தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டமாக உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படலாம். விபத்து காரணமாக இறப்பு அல்லது உடல் ஊனம் போன்ற பிற காரணங்களால் ஏற்படும் திடீர் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளின் போது உதவியாக இருக்கக்கூடிய திட்டமாகும். இந்தத் திட்டத்தில் ஆண்டு பிரீமியமாக 20 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். குறைந்த அளவு வருமானம் கொண்ட மக்களுக்கு அவர்களுக்கான வாழ்க்கைக்கு பாதுகாப்பை வழங்கும் நோக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் ஜூன் 1 முதல் மே 31ஆம் தேதிக்குள் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். பிரீமியம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கான காப்பீடு அடுத்த வருடத்தில் இருந்து தொடங்கும். 18 முதல் 70 வயது வரை உள்ள, வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் தனிநபர் அல்லது கூட்டுக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இந்த திட்டத்தில் இணைய தகுதியானவர்கள். ஆட்டோ டெபிட் மூலம் ஒரு நபருக்கு ஆண்டுக்கு 20 ரூபாய் வீதம் ப்ரீமியம் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பயனாளி விபத்து, இயற்கை பேரழிவு, கொலையால் ஏற்படும் மரணம் உள்ளிட்ட வேறு சில காரணங்களால் இறந்தால் அவருடைய நாமினி அல்லது குடும்ப உறுப்பினர் 2 லட்சம் ரூபாய் பலன் பெற முடியும்.

இது தவிர விபத்து ஏற்படும் நிலையில் இரண்டு கண்களும் முழுமையாக மற்றும் ஈடு செய்ய முடியாத இழப்பு அல்லது இரண்டு கைகள் அல்லது கால்கள் செயலிழந்தால் அல்லது ஒரு கண் பார்வை இழப்பு மற்றும் கைகள் அல்லது கால்கள் செயலிழப்பு ஆகியவற்றுக்கு 2 லட்சம் ரூபாய் கிடைக்கும். மேலும் விபத்து காரணமாக ஒரு கண் முழுமையாகவும் சரி செய்ய முடியாததாகவும் பார்வை இழந்தால் அல்லது ஒரு கை அல்லது கால் செயல் இழந்தால் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

விபத்து மற்றும் குற்றத்தினால் ஏற்படும் மரணம் அல்லது ஊனத்திற்கு எதிராக காப்பீட்டுத் தொகையை பெற காவல்துறையின் எஃப் ஐ ஆர் என்ற முதல் தகவல் அறிக்கை தேவை. இந்த திட்டத்தில் பதிவு செய்யும் பயனாளி ஆண்டு பிரீமியமான 20 ரூபாய் என்ற தொகையை ஆட்டோ டெபிட் வசதி மூலமாக கணக்கு தாரரின் வங்கி அல்லது அஞ்சல் அலுவலக கணக்கில் இருந்து ஒரு தவணையில் கழிக்கப்படும். பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற பொது காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றது. நீங்களும் இந்த திட்டத்தில் பயன் அடைய விரும்பினால் உடனே இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெறுங்கள்.

Nanthini

Recent Posts

சோகம்..! “காதலன் செஞ்ச அந்த காரியம்” அவமானம் தாங்க முடியல… திருமணத்திற்கு முன் பெண்ணின் குடும்பமே தற்கொலை…!!

கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…

13 minutes ago

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

24 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

33 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

42 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

52 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

1 மணத்தியாலம் ago