பிரபல பாடகியான சின்மயி சிவகார்த்திகேயன் மற்றும் டி இமான் விவகாரம் குறித்து பேசி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் சின்மயி. இவர் வைரமுத்து பிரச்சனைக்கு பிறகு சினிமாவில் பெரிய அளவில் பாடவில்லை என்றாலும் கடைசியாக லியோ திரைப்படத்தில் திரிஷாவுக்கு டப்பிங் பேசி இருந்தார். தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய டாபிக்காக வலம் வருவது சிவகார்த்திகேயன் இமான் பற்றிய பேச்சு தான்.
இது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் சின்மயி. இமான்-சிவகார்த்திகேயன் குறித்த விவகாரத்தை பேசியதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். பெண்களைப் பற்றி அதிலும் குறிப்பாக பாலியல் துன்புறுத்தல்களை பற்றி பேசும்போது சற்று பொறுமையாக இருக்குமாறு வலைப்பேச்சு பிஸ்மியிடம் தொலைபேசியில் கூறியிருந்தேன்.
நான் பேச ஆரம்பித்ததில் இருந்து என்னிடம் முரட்டுத்தனமாக தான் அவர் பேசினார். அதிலும் குறிப்பாக பப்புக்கு போற பொம்பளை.. அவளுக்கு என்ன ஆனா எனக்கு என்ன? எனக்கு ஏன் அவங்க மீது பரிதாபம் வரணும் என்று கூறினார். என் விஷயத்தில் வைரமுத்துவை விட்டுவிட்டு என்னை குறை கூறிக் கொண்டிருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் விஷயத்தில் இமானை விட்டுவிட்டு சிவகார்த்திகேயனையே குறை சொல்லி வருகிறார்.
தனக்கு ஒரு விஷயத்தில் ஆதாயம் கிடைக்கின்றது என்பதற்காக யாரையும் படித்து பேச தயாராக இருக்கின்றார் என்று பிஸ்மி மீது குற்றம் சாட்டி இருக்கின்றார். சகோதரரை போல தோற்றமளிக்கும் அவர் நிஜத்தில் கொடூரமான மனிதனாக நடந்து கொண்டிருக்கிறார். அவரது பேச்சிலேயே அவர் ஒரு ஆணாதிக்க ஒழுக்கங்களை கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகின்றது. பொம்பளை என்றால் இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் என்றெல்லாம் பேசுகிறார். அவருடைய நிலைப்பாடு என்ன என்பது இதன் மூலம் எனக்கு தெளிவாக புரிந்து விட்டது என்று அவர் தெரிவித்திருந்தார்.
ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் அருகே உள்ள ரச்சார்லா மண்டலம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும்…
டெல்லியில் திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் ஆக்ரிதி (28) என்ற இளம் பெண், லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு…
ஹிமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில், மக்கள் மற்றும் வாகன நெரிசல் மிகுந்த பொதுச் சாலையில் பாராகிளைடர் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தாய்மாமா மகனும், மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ். ராஜா, அக்கட்சியில்…
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மருத்துவத் தொடர் 'ஹார்ட் பீட்'.…
தேனி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆண்டிபட்டி மற்றும் வருசநாடு பகுதிகளில் புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்த தேனி…