“தினமும் 10 மணி நேரம் நாய் மாதிரி” இதை யார்கிட்ட போய் சொல்வேன்… கண்ணீர் விட்டு கதறி அழும் சீன டெலிவரி பாய்..!!

By Soundarya on ஆடி 26, 2025

Spread the love

சீனாவை சேர்ந்த டெலிவரி பாய் ஒருவர் தன்னுடைய வாழ்க்கை போராட்டத்தையும், பள்ளி படிப்பை சீக்கிரமாகவே நிறுத்தியதால் ஏற்பட்ட வருத்தத்தையும் விளக்கும் பொழுது அவர் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .பெரும் துயரத்தில் அழும்  அந்த டெலிவரி பாய் இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் கடினமாக படிப்பேன் என்றும் கூறியுள்ளார்.  பள்ளியில் இருந்து சீக்கிரமாகவே படிப்பை பாதியில்  நிறுத்தியதற்காகவும் அவர் வருந்துகிறார்.

தொடர்ச்சியாக உடல் சோர்வு, மன அழுத்தம் மற்றும் தங்களுடைய பெற்றோருக்கு தகுதியான வாழ்க்கை வழங்க முடியாத குற்ற உணர்ச்சியையும் அவர் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில் இப்போது நான் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் உணவு டெலிவரி செய்கிறேன். ஒரு நாய் போல சோர்வடைந்து ஒரு நொடி கூட நான் சோர்வடைய துணியவில்லை. நான் அவ்வாறு செய்யும் தருணத்தில் வாழ்க்கை என்னும் வெறும் வயிற்றில் தண்டிக்கும். நான் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும். என் பெற்றோருக்கு அவர்கள் தகுதியான வாழ்க்கையை என்னால் கொடுக்க முடியாது.

   

 

View this post on Instagram

 

A post shared by CHINA IN A MINUTE (@chinaminutes)

   

நான் விரும்பும் வாழ்க்கையை கூட என்னால் வாழ முடியாது.  ஆனால் அதைப் பற்றி நான் யாரிடம் பேசுவது?” என்று கூறுகிறார். இந்த வீடியோ, தாங்கள் விரும்பும் வழியில் வாழ்க்கையை வாழ்வது பற்றி கனவு கூட காண முடியாத குறைந்தபட்ச ஊதியத் தொழிலாளர்களின் கடுமையான போராட்டங்களை காட்டுகிறது.