2026-இல் பதவியேற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப வசதிகளை கொண்டுவந்துள்ளது. அதன்படி சாதிச் சான்றிதழ், புதிய குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற அத்தியாவசியத் தேவைகள் மக்களுக்குக் காலதாமதமின்றி நேரடியாகக் கிடைப்பதற்காகத் தவெக அரசு புதிய நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய அமைச்சர் செங்கோட்டையன், ஆன்லைனில் சான்றிதழ்களுக்குப் பதிவு செய்த 5 நாட்களுக்குள் அதிகாரிகள் கள ஆய்வு செய்து பணிகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்; ஒருவேளை அதிகாரிகள் தவறினால், ஆன்லைன் மென்பொருள் மூலமாக மனுக்கள் தானாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் லஞ்ச ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும், வரவிருக்கும் பருவமழையை எதிர்கொள்ளப் பேரிடர் மீட்புப் படைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், தமிழக அரசு முன்னெச்சரிக்கையாகக் கோரியிருந்த 1,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்கிவிட்டதால் வெள்ளத் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில் தவெக இணைவது குறித்து முதலமைச்சர் விஜய் அவர்களே சரியான நேரத்தில் முடிவெடுப்பார் என்றும், முதல்வர் அடிக்கடி செய்தியாளர்களைச் சந்திக்கத் தேவையில்லை, அவரது மக்கள் நலச் செயல்பாடுகளே பேசும் என்றும், சிறந்த ஆட்சியைத் தருவதற்காகவே முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…