நாளை முதல் ஒரு வாரம் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். எனது வெளிநாட்டு பயணம் குறித்து நாளை செய்தியாளர்களிடம் விளக்குகிறேன். நாளை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணமாகச் செல்கிறேன் என்று கூறியுள்ளார். இதன்மூலமாக தமிழகத்திற்கு முக்கிய முதலீடுகளை கொண்டுவர உள்ளார். திமுக ஆட்சி அமைந்த 4.5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
