கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதற்கிடையில் சமீப காலமாகவே நாடு முழுவதும் ஏராளமான மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் கர்நாடகா மாநிலம் ஹாசன், சிக்கமகளூரு, சிவமேக்கா மாவட்டங்களில் கடந்த சில தினங்களில் மட்டுமே 27 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்கள். இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி தான் காரணமாக இருக்குமோ என்று அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளார்கள் .இந்த நிலையில் இது குறித்து பெங்களூருவில் நேற்று முதல் மந்திரி சித்ராமையா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அவசரகதியில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துவிட்டது கூட மாரடைப்பால் மரணம் அடைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் கொரோனா தடுப்பூசி மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது .மக்கள் யாருக்கும் நெஞ்சு வலி ஏற்பட்டாலோ, மூச்சுப் பிரச்சினை இருந்தாலும் ,உடல்நிலை ஏதேனும் மாற்றம் ஏற்பட்டாலோ அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த பிரச்சனை குறித்து சுகாதாரத்துறை மந்திரி மற்றும் சிறப்பு மருத்துவ குழுவினரும் விசாரணை செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.
