தமிழகத்தில் வெடித்தது அடுத்த அதிர்ச்சி..! தூத்துக்குடி மாணவி படுகொலை ஈரம் காய்வதற்குள் சென்னையில் மற்றுமொரு கொடூரம்..!!

By Soundarya on பங்குனி 12, 2026

Spread the love

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பிளஸ்-2 மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சோகம் மறைவதற்குள், சென்னையில் ஒரு கல்லூரி மாணவி காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். திருச்சியிலிருந்து கல்லூரி புராஜெக்ட் வேலைக்காகச் சென்னை வந்த அந்த மாணவியை, அடையாறு பகுதியில் வைத்து ஒரு கும்பல் காரில் கடத்தி இந்த கொடூரத்தைச் செய்துள்ளது.

இந்த அடுத்தடுத்த வன்கொடுமைச் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலிலும் சட்டம் ஒழுங்கு குறித்த அடுத்த பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், இந்தச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.